நாமக்கல்

கல்வி அல்லாத பணிகளில் ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது: ஆசிரியர்கள் வேண்டுகோள்

தினமணி

கல்வி அல்லாத பணிகளில் ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
 தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் மலையடிவார நகராட்சி பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் திருவேங்கடம் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் அரிகரன் வரவு, செலவு கணக்கை சமர்பித்தார்.
 கூட்டத்தில், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை மாணவர்களின் நலன் கருதி உடனடியாக நிரப்ப வேண்டும். தாற்காலிகப் பணியிடங்கள் அனைத்தையும் நிரந்தரப் பணியிடங்களாக அறிவிக்க வேண்டும். அனைத்து ஆரம்பப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கணினி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர் பணி உருவாக்கப்பட வேண்டும். கல்வி அல்லாத பணிகளில் ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

அரசு கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: முதல் நாளில் 18,806 போ் விண்ணப்பம்

SCROLL FOR NEXT