நாளை மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பார்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் உடையவர் தலைமை வகிக்கிறார். இக் கூட்டத்தில் வரும் 23-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் மனிதச் சங்கிலிப் போராட்டம் குறித்தும், நகராட்சி, ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சி, வார்டு கிளை, வாக்குச் சாவடிகளுக்கு தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தேர்வு குறித்தும், கட்சிப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. எனவே, இக் கூட்டத்தில் மாவட்ட, மாநில கட்சி நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக் குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், கட்சியின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும்.