முகப்பு
நாமக்கல்

கடந்த நிதியாண்டில் 17, 000 விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2017-2018 ஆம் நிதியாண்டில் 17,033 விவசாயிகள் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் பிரீமியம் செலுத்தியுள்ளனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2017-2018 ஆம் நிதியாண்டில் 17,033 விவசாயிகள் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் பிரீமியம் செலுத்தியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் 2017-18 ஆம் ஆண்டு காரீப் பருவத்தில் பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் வங்கி கடன்பெற்ற விவசாயிகள் 73 பேர்,  கடன் பெறா விவசாயிகள் 15,140 பேர் காப்பீடு செய்துள்ளனர். பயிர் காப்பீடு செய்யப்பட்ட பரப்பளவு 29,014 ஏக்கர் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட பிரீமியத் தொகை ரூ. 88 லட்சத்து 81 ஆயிரத்து 151. 
2017-18 ஆம் ஆண்டு ரபி பருவத்தில் நெல் சம்பா பயிருக்கு 1,368 விவசாயிகள் 1481.921 ஏக்கருக்கு பயிர் காப்பீடு செய்துள்ளனர். பிரீமியத் தொகை ரூ. 5,85,358 வசூல் செய்யப்பட்டுள்ளது. 2017-18 ரபி பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களுக்கு  452 கடன் பெற்ற விவசாயிகள் 720 ஏக்கரில் பயிர் காப்பீடு செய்து ரூ. 9.72 லட்சம் பிரீமியத் தொகை பெறப்பட்டுள்ளது.
கடந்த 2016-17 ரபி பருவத்தில் 21,516 விவசாயிகள், பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்திருந்தனர். இதில், நெல் பயிருக்கு விதைப்பு செய்ய இயலாமை இனத்தில் பிரீமியம் செலுத்திய 335 விவசாயிகள்,  நெல் விதைப்பு செய்து மகசூல் இழப்பீட்டை சந்தித்த 805 விவசாயிகள் என மொத்தம் 1,140 விவசாயிகளுக்கு ரூ. 1,09,43,917 இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. நெல் தவிர, இதர பயிர்களுக்குப் பதிவு செய்துள்ள 732 விவசாயிகளுக்கு ரூ. 1,05,31,000 இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.  எஞ்சியுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →