முகப்பு
நாமக்கல்

கராத்தே போட்டியில் எஸ்.ஆர்.வி. எக்ஸெல் பள்ளி சாதனை

ராசிபுரம் எஸ்ஆர்வி., எக்ஸெல் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான கராத்தே போட்டியில் சாதனை புரிந்துள்ளனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

ராசிபுரம் எஸ்ஆர்வி., எக்ஸெல் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான கராத்தே போட்டியில் சாதனை புரிந்துள்ளனர்.
ராசிபுரம் ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியில் அண்மையில் மாநில அளவிலான தற்காப்பு கலைப் போட்டிகள் நடைபெற்றன. 
இதில் கராத்தே போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்டது. கராத்தே இறுதிப்  போட்டியில் எஸ்ஆர்வி., எக்ஸெல் பள்ளியின் மாணவர்கள் ஐந்து பேர் முதலிடத்தையும், நான்கு பேர் இரண்டாமிடத்தையும், எட்டு மாணவர்கள் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தலைவர் ஆர். துரைசாமி, தாளாளர் கே.என்.சுப்ரமணியம், பொருளாளர் பி.வஜ்ரவேலு, நிர்வாக அறங்காவலர் கே.மனோகரன், இயக்குநர் டாக்டர் இ. தங்கவேல், பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பாராட்டினர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →