நாமக்கல்

லாரி ஓட்டுநர் வீட்டில் புகுந்து 15 பவுன் நகை திருட்டு

DIN

ராசிபுரம் அருகே அரியாகவுண்டம்பட்டியில் லாரி ஓட்டுநரின் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை, ரொக்கம் ரூ. 20 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
அரியாகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன் (50), லாரி ஓட்டுநர். இவர், சில தினங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள தனது மாமனார் வீட்டுக்குக் குடும்பத்துடன் சென்றிருந்தார்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை ஊர் திரும்பிய அவர் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த சுமார் 15 பவுன் நகை, ரொக்கம் ரூ. 20 ஆயிரம் திருடுபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவர் அளித்த புகாரின்பேரில் நிகழ்விடம் சென்ற நாமகிரிபேட்டை போலீஸார் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் தடயங்களைப் பதிவு செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT