நாமக்கல்

குமாரபாளையம் : தளபதி அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

DIN

குமாரபாளையம் தளபதி அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் சமூக சேவை செய்தவர்களுக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .
சங்கத்தின் பட்டயத் தலைவர் என்.ஜெகதீஷ் தலைமை வகித்தார். முன்னாள் கூட்டு மாவட்டத் தலைவர் ஏ.எஸ்.அரவிந்தராஜ், முன்னாள் ஆளுநர் ரவிச்சந்திரன், கூட்டு மாவட்டத் தலைவர் டி.எஸ்.விஜயகுமார், மாவட்டத் தலைவர் ஆர்.ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். விழாவில், புதிய தலைவராக ஏ.அனிஷ்குமார், செயலர்கள் டி.பி.கோகுல்நாத், எம்.பன்னீர் செல்வராஜன், பொருளாளர் கே.ஆர்.குமார் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பிச்சைக்காரர்களின் மனதை மாற்றி, மீண்டும் குடும்பத்தாருடன் சேர்த்து வரும், அட்சயம் அமைப்பின் தலைவர் நவீன்குமார், இலவச கணினி பயிற்சி அளிக்கும் தினக்கல்வி மற்றும் ருக்கு பொதுநல மையத்தின் அமைப்பாளர் வி.சசிகுமார், அரசு பள்ளி மாணவ, மாணவியரை கல்விப் பணியில் ஊக்குவிக்கும் விடியல் ஆரம்பம் அமைப்பின் தலைவர் ஆர்.பிரகாஷ் ஆகியோருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
சங்கத்தின் துணை ஆளுநர் வி.விஜயகுமார், வட்டாரத் தலைவர் செங்கோட்டையன், நிர்வாகிகள் கே.ஆர்.முத்தையா, ஜி.விஸ்வநாதன், எம்.சாந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில், ஏழை எளிய மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை, கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT