நாமக்கல்

தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

DIN

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து நாமக்கல் பூங்கா சாலையில் மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  
எல்பிஎப் மாவட்ட கவுன்சில் செயலாளர் ச.பழனிப்பன், ஏஐடியுசி மாவட்ட துணைத் தலைவர் என். தம்பிராஜா ஆகியோர் தலைமை வகித்தனர். 
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்த முறை, அவுட்சோர்ஸிங் முறையை கைவிட வேண்டும். தொழிற்சங்க உரிமைகளை பேணிப்பாதுகாக்க சங்கம் வைக்க வேண்டும். 
நெல்லுக்கான ஆதார விலையை வழங்க வேண்டும். 
கரும்புக்கு கட்டுப்படியான விலையை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது. 
 ஏஐடியூசி அரசுப் போக்குவரத்து பொதுச்செயலாளர் என். முருகராஜ், சிஐடியு மாவட்ட பொருளாளர் ஏ.கே.சந்திரசேகரன், எல்பிஎப் நகர அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT