நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெறும் அண்ணா பிறந்த நாள் விழாவில் திமுகவினர் திரளாக பங்கேற்க வேண்டும் என மாவட்ட பொறுப்பாளர் வேண்டுகோள் விடுத்தார்.
இதுகுறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக மாவட்டப் பொறுப்பாளர் எஸ். காந்திசெல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை:
அண்ணாவின் 110-ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கும், உருவப் படத்திற்கும், மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகளில் நாமக்கல் கிழக்கு மாவட்டம் முழுவதும் உள்ள நகராட்சி, ஒன்றியம், பேரூராட்சி,நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பாக நடத்திட வேண்டும்.
நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு காலை 8 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படவுள்ளது. நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, நகராட்சி, ஒன்றிய நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
அதேபோல் மாலை 4 மணிக்கு விழுப்புரத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவில் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார். விழாவில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, வார்டு நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும்.