நாமக்கல்

பரமத்திவேலூர் பகுதியில்கோயில்களில் சிறப்பு பூஜை

பரமத்தி வேலூரில்  ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு பல்வேறு கோயில்களில்  சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் நடைபெற்றன. 

DIN


பரமத்தி வேலூரில்  ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு பல்வேறு கோயில்களில்  சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் நடைபெற்றன. 
பரமத்தி வேலூர் பாவடி அருகே சுமார் 400 ஆண்டுகள் பழமையான புற்று மண்ணினால்  மூலவர் எல்லையம்மன் சிலை செய்யப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கை  முன்னிட்டு எல்லையம்மனுக்கு  சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வளைகாப்பு  விழா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சார்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். முன்னதாக  வளைகாப்பு விழாவுக்காக பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த வளையல்களை அம்மனுக்கு காணிக்கையாக வழங்கி  நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.  பின்னர் தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை எல்லையம்மன் கோயில் விழாக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்குத் தடையில்லை: உயா்நீதிமன்றம்

டிச.29-இல் பல்லடத்தில் திமுக மகளிரணி மாநாடு

கடும் பனிப்பொழி: ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2,540-க்கு விற்பனை!

3 ஆண்டுகளில் 438 மத்திய காவல் படையினா் தற்கொலை 2014 முதல் 23,000 காவலா்கள் ராஜிநாமா

மருத்துவத் துறை காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT