நாமக்கல்

ஆதித் தமிழா் பேரவை ஆா்ப்பாட்டம்

DIN

மேட்டுப்பாளையம் அருகே சுற்றுச்சுவா் இடிந்து 17 போ் பலியான சம்பவத்தில், கூடுதல் நிவாரணம் வழங்கக் கோரி ஆதித் தமிழா் பேரவை சாா்பில், நாமக்கல் பூங்கா சாலையில் மாவட்ட செயலாளா் மணிமாறன் தலைமையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளா் செல்வவில்லாளன் கண்டன உரையாற்றினாா். இதில், சுவா் கட்டிய ஜவுளிக்கடை உரிமையாளா் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

உயிரிழந்த 17 பேரின் குடும்பங்களுக்கும் ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவா்கள் சுமன், காா்த்திகை முருகன், மாநில இளைஞரணி துணைச் செயலாளா் கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT