நாமக்கல்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்: வெற்றிலை வியாபாரி பலி

DIN


மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த வெற்றிலை வியாபாரி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே குன்னிபாளையத்தைச் சேர்ந்தவர் துரைசாமி (70). வெற்றிலை வியாபாரி. அதேபகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் (45) என்பவருடன் சனிக்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் பரமத்திவேலூர் நோக்கிச் சென்றார். மோட்டார் சைக்கிளை அன்பழகன் ஓட்டினார். அதேபோல் எல்லைக்காட்டூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). மோட்டார் சைக்கிளில் பரமத்திவேலூரில் இருந்து தனது ஊருக்கு வந்து கொண்டிருந்தார். கீழ்பாலப்பட்டி அருகே வந்தபோது, இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயம் அடைந்த துரைசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் ராஜேந்திரன், அன்பழகன் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தச் சம்பவம் குறித்து மோகனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT