நாமக்கல்

காவிரி ஆற்றில் மணல் கடத்தல்: 5 இருசக்கர வாகனங்களை கைப்பற்றி போலீஸார் விசாரணை

DIN

பரமத்தி வேலூர் வட்டம், பிலிக்கல்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 5 இருசக்கர வாகனங்களை கைப்பற்றி, தப்பியோடிய 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
பிலிக்கல்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து 
இருசக்கர வாகனங்கள் மூலம் மணல் கடத்தப்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் ரவிக்குமாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் ஜேடர்பாளையம் போலீஸார் உதவியுடன் பிலிக்கல்பாளையம் காவிரியாற்றில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால்,   இருசக்கர வாகனங்களை  விட்டுவிட்டு மணல் கடத்தல் காரர்கள் தப்பியோடி விட்டனர். இதையடுத்து 5 இருசக்கர வாகனங்களை போலீஸார் கைப்பற்றி,   தப்பியோடிய 5 பேர் குறித்து  ஜேடர்பாளையம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT