நாமக்கல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்

DIN


 பரமத்தி வேலூர் அருகே உள்ள பாலப்பட்டியில் இருந்து முறைகேடாக மணல் கடத்தி வந்த லாரியை பரமத்தி வேலூர் போலீஸார் பறிமுதல் செய்து தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடிவருகின்றனர்.
பரமத்தி வேலூர் அருகே உள்ள மேல்பாலப்பட்டியில் வெள்ளிக்கிழமை இரவு, பரமத்தி வேலூர் காவல்  துணைக் கண்காணிப்பாளர் பழனிசாமி, ஆய்வாளர் மனோகரன் உள்ளிட்ட போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில் பாலப்பட்டியில் இருந்து நாமக்கல்லுக்கு அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மணல் ஏற்றி வந்த லாரியை பரமத்தி வேலூர் போலீஸார் பறிமுதல் செய்து தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர். மேலும் மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பரமத்தி வேலூர் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT