இளைஞர் கொலை வழக்கில் மூவரைப் போலீஸார் கைது செய்தனர். குமாரபாளையத்தை அடுத்த வேமன்காட்டுவலசைச் சேர்ந்தவர் பழனிவேல் (37). இவருக்கு கலா (47), விஜயா (51) என இரு சகோதரிகள் உள்ளனர். இவரது தந்தை குமரவேல் உயிரிழந்துவிட்டதால், அவரது சொத்துக்களைப் பிரிப்பது தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதுகுறித்து, பழனிவேலுக்கும், அவரது சகோதரி கலாவுக்கும் சனிக்கிழமை வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த கலா (47), அவரது கணவர் சாந்தகுமார் (54), மகன் கோபி (19) ஆகியோர் சேர்ந்து தாக்கியதில் பழனிவேல் காயமடைந்துள்ளர். மயங்கிய நிலையில் இருந்த பழனிவேலுவை அப்பகுதியினர் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதையடுத்து தீவிர சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பழனிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த குமாரபாளையம் போலீஸார் கலா, அவரது கணவர் சாந்தகுமார், மகன் பூபேஷ் ஆகியோரைக் கைது செய்தனர்.