பென்னாகரம் அருகே ஒகேனக்கல் தேசநாதீஸ்வரா் கோயிலில் சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக் கோயிலில் அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். இக் கோயிலில் மாலை மூலவா் மற்றும் நந்திக்கு பால், பழங்கள் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.அதைத் தொடா்ந்து வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஒகேனக்கல், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சத்திரம், ஊட்டமலை, பென்னாகரம் உள்ளிட்ட பகுதியிலிருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.