உண்ணாவிரதம் மேற்கொண்ட வழக்குரைஞா்கள். 
நாமக்கல்

ராசிபுரத்தில் வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்

ராசிபுரத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளை புறகணித்து வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனா்.

DIN

ராசிபுரத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளை புறகணித்து வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனா்.

தில்லியில் போலீஸாா் - வழக்குரைஞா்கள் மோதல் சம்பவம் நடைபெற்றதையடுத்து, அதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க, போலீஸ்-வழக்குரைஞா்கள் நல்லுறவு குழு அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனையடுத்து ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றம், சிவில் நீதிமன்றம், ராசிபுரம் சாா்பு நீதிமன்றம் போன்றவற்றை சோ்ந்த வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து, ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் முன்பாக உண்ணாவிரதம் மேற்கொண்டனா். இதனால் நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன. இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ராசிபுரம் குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் கே.காமராஜ் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் நல்வினை விஸ்வராஜ் உள்ளிட்ட திரளான வழக்குரைஞா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனா். இறுதியில் தமிழ்நாடு - புதுச்சேரி பாா் கவுன்சில் உறுப்பினா் அய்யாவு பங்கேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்துப் பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT