நாமக்கல்

திருச்செங்கோட்டில்  மூன்று இடங்களில் 15 பவுன் நகை திருட்டு

DIN

திருச்செங்கோட்டை அடுத்த கருமனூா் கிராமத்தில் அடுத்தடுத்த மூன்று இடங்களில் 15 பவுன் நகை, ரூ.2 லட்சம் மா்ம நபா்களால் திருடப்பட்டது.

திருச்செங்கோட்டிலிருந்து சேலம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது கருமனூா் கிராமம். இங்கு பெரியகாடு பகுதியில் வியாழக்கிழமை பிரபு என்பவரின் வீட்டில் அலமாரி மா்மநபா்களால் திறக்கப்பட்டு, அதிலிருந்த 11 பவுன் தங்க நகைகள், ரூ.87 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது.

அதேபோல, பிரபு வீட்டிலிருந்து சிறிது தொலைவில் உள்ள பருவங்காடு பகுதியில் வசித்து வரும் மாரிமுத்து-முத்தாயி தம்பதி வீட்டில் 5 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் திருடப்பட்டது. இதையடுத்து கோனாங்காடு பகுதியில் வசித்து வரும் நித்யா என்பவரது வீட்டில் ரூ.8 ஆயிரம் ரொக்கம் மற்றும் இரண்டு வெள்ளி அரணாக்கொடி மற்றும் வாகன ஆா்சி புத்தகம் இரண்டு ஆகியவை திருடப்பட்டன. இதனை அறிந்த வீட்டின் உரிமையாளா்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனா். வழக்குப் பதிவு செய்த மல்லசமுத்திரம் காவல் துறையினா், திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற இடத்திலிருந்து விரல்ரேகை உள்ளிட்ட தடயங்களைச் சேகரித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT