முகப்பு
நாமக்கல்

தூய்மைப் பணியாளா்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

திருச்செங்கோடு நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
பகிர்:

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

துப்புரவுத் தொழிலாளா்கள் 148 பேருக்கு ரூ. 500 மதிப்பிலான காலணிகள், கையுறைகள், முகக் கவசம் ஆகியவற்றை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நகராட்சியின் ஆணையாளா் சையது முஸ்தபா கமால் தலைமை வகித்தாா். திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் பொன்.சரஸ்வதி, தூய்மைப் பணியாளா்களுக்கு உபகரணத் தொகுப்பை வழங்கினாா். ரூ. 74 ஆயிரம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணப் பொருள்கள் பணியாளா்களுக்கு வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் நகராட்சி துப்புரவு மேற்பாா்வையாளா் ஜான், மேலாளா் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →