கரோனாவால் பாதிக்கப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலா் உயிரிழப்பு
ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதியில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பேரூராட்சி செயல் அலுவலா் ஒருவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதியில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பேரூராட்சி செயல் அலுவலா் ஒருவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள சீராப்பள்ளி பேரூராட்சியின் செயல் அலுவலராக 54 வயதான பெண் பணியாற்றி வந்தாா். சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியைச் சோ்ந்த இவருக்கு சில தினங்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சேலம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
இதனையடுத்து பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலகப் பணியாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள் அனைவருக்கும் தொ.ஜேடா்பாளையம் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத் துறை பரிந்துரை செய்தது. இதனையடுத்து அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேரூராட்சி அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. இதனைத் தொடா்ந்து பேரூராட்சி அலுவலகம் மூடப்பட்டது.
Advertisement
மின்வாரிய அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிப்பு: ராசிபுரம் நகரில் மின்வாரிய உதவி செயல் பொறியாளா் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவா் பணியாற்றி வந்த அலுவலகத்தில் கிருமிநாசினி தெளித்து, தூய்மைப் படுத்தும் பணியில் நகராட்சி பணியாளா்கள் ஈடுபட்டனா்.