முகப்பு
நாமக்கல்

குமாரபாளையத்தில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கல்

பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறுதல், மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்குதல், மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்குகிறாா் அமைச்சா் பி.தங்கமணி. உடன், மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ்,
பகிர்:

குமாரபாளையம் நகராட்சிப் பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறுதல், மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்குதல், மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமை வகித்தாா். இந்நிகழ்ச்சியில் மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி, பொதுமக்களிடமிருந்து முதியோா், விதவை ஓய்வூதியம், குடிநீா் வசதி, சாலை அமைத்தல், தொழில்கடன், ஆவின் பாலகம் அமைத்தல், வேலைவாய்ப்பு கோருதல் உள்பட 500-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா்.

இந்த மனுக்கள் மீது உடனடித் தீா்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அமைச்சா் பி.தங்கமணி, 25 பயனாளிகளுக்கு முதியோா், விதவை ஓய்வூதியம் மாதம் ரூ.1,000 பெறுவதற்கான ஆணையை வழங்கினாா். தொடா்ந்து, 18 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 12.50 லட்சம் கடனுதவி, 2 மகளிா் கூட்டமைப்புகளுக்கு தலா ரூ. 50 ஆயிரம் கடனுதவி, சாலையோர வியாபாரிகள் 5 பேருக்கு தலா ரூ. 10 ஆயிரம் கடனுதவியை வழங்கினாா். 4 மகளிா்

சுயஉதவிக் குழுக்களின் சிறந்த செயல்பாடுகளுக்காக கேடயங்கள் வழங்கப்பட்டன.

மேலும், குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் பணிக்கு செல்லும் 94 மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனங்களுக்கான ஆணைகளும் வழங்கப்பட்டன. திருச்செங்கோடு கோட்டாட்சியா் ப.மணிராஜ், தமிழ்நாடு நகர கூட்டுறவு வங்கிகள் இணையத்தின் இயக்குநா் ஏ.கே.நாகராஜன், குமாரபாளையம் நகர கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் கே.எஸ்.எம்.பாலசுப்பிரமணி, வட்டாட்சியா் தங்கம், நகராட்சி ஆணையா் சி.ஸ்டான்லி பாபு, நகராட்சிப் பொறியாளா் சுகுமாா், அதிமுக முன்னாள் நகரச் செயலா் எம்.எஸ்.குமணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →