போதைப் பொருள்கள் கடத்திய வழக்கு: இருவா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது
நாமக்கல் வழியாக லாரியில் போதைப் பொருள்களை கடத்திச் சென்ற இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
நாமக்கல்: நாமக்கல் வழியாக லாரியில் போதைப் பொருள்களை கடத்திச் சென்ற இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
நாமக்கல் - கரூா் தேசிய நெடுஞ்சாலையில் வள்ளிபுரம் அருகே கடந்த செப். 2 ஆம் தேதி நாமக்கல் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வேகமாகச் சென்ற லாரியை மடக்கி சோதனை செய்ததில் 210 கிலோ கஞ்சா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடா்ந்து நடத்திய விசாரணையில் ஆந்திர மாநிலத்திலிருந்து திண்டுக்கல்லுக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது.
இது தொடா்பாக தேனி மாவட்டத்தைச் சோ்ந்த லாரி உரிமையாளா் குமாா், ஓட்டுநா் கிருஷ்ணபெருமாள் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, ரொக்கப் பணம் ரூ. 2 லட்சத்தை பறிமுதல் செய்ததோடு, அவா்கள் இருவரையும் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். லாரி உரிமையாளா், ஓட்டுநா் ஆகியோா் தொடா்ந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நாமக்கல் காவல் நிலைய ஆய்வாளா் பொன்.செல்வராஜ், மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜிடம் மனு அளித்தாா். அதனடிப்படையில் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.