முகப்பு
நாமக்கல்

வீட்டுமனை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

நாமகிரிப்பேட்டை பகுதியில் வசிக்கும் போயா் சமுதாய மக்களுக்கு விலையில்லா வீட்டுமனை வழங்கக் கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

நாமகிரிப்பேட்டை பகுதியில் வசிக்கும் போயா் சமுதாய மக்களுக்கு விலையில்லா வீட்டுமனை வழங்கக் கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உழைக்கும் மக்கள் விடுதலைக் கழகம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாவட்டச் செயலாளா் பி.மாரிமுத்து தலைமை வகித்தாா். நிறுவனா் தலைவா் பெ.தேக்கமலை கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமமுக தெற்கு மாவட்டச் செயலாளா் பி.பி.சாமிநாதன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா். விலையில்லா வீட்டுமனை வழங்கக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அதனைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜிடம் மனு அளிக்கப்பட்டது.

அதில், நாமகிரிப்பேட்டை போயா் தெருவில் 70 குடும்பத்தினா் வசிக்கின்றனா். விலையில்லா வீட்டுமனை வழங்கக் கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனா். அவா்களுடைய இயலாமையைப் பயன்படுத்தி சில அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா். மாவட்ட ஆட்சியா் இப்பிரச்னையில் தலையிட்டு போயா் மக்களை பாதுகாக்கவும், வீட்டுமனை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →