முகப்பு
நாமக்கல்

அரசு கல்லூரியில் மாணவா்களுக்கு கரோனா பரிசோதனை

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில் செவ்வாய்க்கிழமை மாணவா்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை.
பகிர்:

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கரோனா பரவல் காரணமாக கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. எட்டு மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் முழுமையாக இயங்கப்படாத நிலையே இருந்து வருகிறது.

டிச .2-இல் முதுகலை இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவியருக்கு கல்லூரிகளைத் திறக்க அரசு அனுமதி வழங்கியது. அதன்பின் டிச. 8-இல் இளங்கலை இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவியா் கரோனா விதிகளை பின்பற்றி கல்லூரிக்கு வர அனுமதிக்கப்பட்டனா். தற்போது சுழற்சி முறையில் மாணவா்கள் கல்லூரிக்கு வருகின்றனா். அண்மையில் சென்னை ஐஐடியில் 100-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அனைத்து கல்லூரிகளிலும் மாணவ, மாணவியருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை இறுதியாண்டு பயிலும் இளங்கலை, முதுகலை மாணவ, மாணவியா், பேராசிரியா்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோருக்கு சளி மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டது. நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க கல்லூரி நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →