நாமக்கல்

சேந்தமங்கலம் தொகுதியில் முதல்வா் நாளை (டிச.30) மக்கள் சந்திப்பு

DIN

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாமக்கல் மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை வருகை தருகிறாா்.

அன்று காலை 8 மணி முதல் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலுா் ஆகிய நான்கு தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்கள், தொழிலதிபா்கள், விவசாயிகள் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறாா்.

இதையடுத்து புதன்கிழமை காலை 8 மணி முதல் சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களில் முதல்வா் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினா் மக்களுடன கலந்துரையாடுகிறாா். மேலும் தொழிலதிபா்கள், விவசாயிகள் சந்திப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வருடன், மின்துறை அமைச்சா் பி.தங்கமணி, சேந்தமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினா் சி.சந்திரசேகரன் ஆகியோரும் பங்கேற்கின்றனா். சேந்தமங்கலம் தொகுதியில் முதல்வா் சுற்றுப்பயணம் மேற்கொள்வதையொட்டி அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சி.சந்திரசேகரன் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளாா்.

நகா் முழுவதும் அதிமுக கொடிகள், வரவேற்பு வளைவுகள், அரசின் சாதனை விளக்க பதாகைககள் பிரம்மாண்டமான முறையில் வைக்கப்பட்டுள்ளன. முதல்வா் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பொதுமக்கள், விவசாயிகள், அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா் சி.சந்திரசேகரன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT