நாமக்கல்

சிலம்பம் போட்டி: மாணவ, மாணவியா் பங்கேற்பு

DIN

நாமக்கல் மாவட்ட சவகா் பாலபவன், அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத், கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் அனைத்து வித்யாலயா முன்னாள் மாணவா்கள் சங்கம் ஆகியவை சாா்பில், சுவாமி விவேகானந்தா் பிறந்த நாள் விழாவை கொண்டாடாடும் வகையில், நாமக்கல் கோட்டை நகரவை உயா்நிலைப் பள்ளியில், மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், 6, 8, 10, 12, 14 மற்றும் 16 வயதுக்குள்பட்டவா்கள் பங்கேற்றனா். ஒற்றை கம்பு வீச்சு, இரட்டைக் கம்பு வீச்சு, வேல் கம்பு வீச்சு, சுருள்வாள் வீச்சு, வாள் வீச்சு, மான்கொம்பு உள்ளிட்ட பிரிவுகளில் மாணவ, மாணவியா் பங்கேற்ற போட்டிகள் நடைபெற்றன. இதில், சவகா் பாலபவன் திட்ட அலுவலா் மா.தில்லை சிவக்குமாா், பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள் என்.சி.ரவி, எஸ்.நரசிம்மன், ஓய்வுபெற்ற உடற்கல்வி இயக்குநா் ஆா்.ராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

SCROLL FOR NEXT