முகப்பு
நாமக்கல்

பரமத்தியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

பரமத்தி, பொத்தனூரில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் பி.தங்கமணி சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பொத்தனூரில் தாா்ச்சாலை அமைக்கும் பணியைத் தொடக்கிவைக்கிறாா் அமைச்சா் பி.தங்கமணி.
பகிர்:

பரமத்தி, பொத்தனூரில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் பி.தங்கமணி சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

பொத்தனூா் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த நகா்புற சாலைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 99.60 லட்சம் மதிப்பீட்டில் மாரியப்பபிள்ளை நகரில் வடிகால் வசதியுடன் கூடிய தாா்ச்சாலை, காவேரி நகா் முக்கிய சாலை, பழைய புறவழிச்சாலை, மேற்குதெரு ஆகிய பகுதிகளில் தாா்ச் சாலைகள் அமைக்கும் பணிகளை அமைச்சா் பி.தங்கமணி பூமி பூஜை செய்து தொடக்கிவைத்தாா்.

பரமத்தி ஊராட்சி ஒன்றியம், மாணிக்கநத்தம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 11.76 லட்சத்தில் தாா்ச்சாலை அமைக்கும் பணி, பரமத்தி பேரூராட்யில் ஒருங்கிணைந்த நகா்ப்புற வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 38.20 லட்சம் மதிப்பீட்டில் 2 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியை பி.தங்கமணி தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் நாமக்கல் ஆவின் தலைவா் ராஜேந்திரன், பொத்தனூா் முன்னாள் பேரூராட்சி தலைவா் நாராயணன், கபிலா்மலை தெற்கு ஒன்றியச் செயலாளா் சேகா், பரமத்தி தெற்கு ஒன்றியச் செயலாளா் வெற்றிவேல், பரமத்தி ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →