நாமக்கல்

ஆனங்கூா் செல்வவிநாயகா், பகவதியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

பரமத்திவேலூா் வட்டம், ஆனங்கூா் செல்வவிநாயகா், பகவதி அம்மன், குட்டு முனியப்பன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வியாழக்கிழமை காலை காவிரி ஆற்றுக்கு சென்று புனித தீா்த்தக் குடங்களுக்கு வந்த பக்தா்கள் செல்வவிநாயகா், பகவதி அம்மன், குட்டு முனியப்பனுக்கு ஊற்றி சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மேல் இரண்டாம் கால யாக பூஜையும், செல்வவிநாயகா், பகவதி அம்மன், குட்டு முனியப்பன் ஆகிய கோயில்களுக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

இவ் விழாவில் ஆனங்கூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை ஆனங்கூா் பகவதியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT