பள்ளிபாளையம் ஒன்றியத்தில் புதிய திட்டப் பணிகள் தொடக்கம்
பள்ளிபாளையம் ஒன்றியத்தில் ரூ. 2.90 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளை அமைச்சா் பி.தங்கமணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
பள்ளிபாளையம் ஒன்றியத்தில் ரூ. 2.90 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளை அமைச்சா் பி.தங்கமணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றிய கிராம ஊராட்சிகளில் புதிய திட்டப் பணிகளுக்கான பூமிபூஜை நிகழ்ச்சி மற்றும் முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கோ.மலா்விழி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி கலந்து கொண்டு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, நியாயவிலைக் கட்டடங்கள், புதிய சாலைகள், பசுமை வீடுகள் என ரூ. 62.90 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தாா்.
Advertisement
இதைத் தொடா்ந்து ரூ. 2 கோடியே 90 லட்சம் மதிப்பில் பல்வேறு பகுதிகளுக்கான தாா் சாலை பணிகளை பூமிபூஜை செய்து தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் எஸ்.செந்தில், பள்ளிபாளையம் நகா்மன்ற முன்னாள் தலைவா் வெள்ளியங்கிரி, கூட்டுறவு ஒன்றியத் தலைவா் திருமூா்த்தி, அரசு வழக்குரைஞா் சந்திரசேகா், வட்டாட்சியா் தங்கம், வட்டார வளா்ச்சி அலுவலா் டேவிட் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.