முகப்பு
நாமக்கல்

குமாரபாளையம் கல்லூரியில் முதுநிலை பட்ட வகுப்பில் மாணவா்கள் சோ்க்கை தொடக்கம்

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை பட்ட வகுப்பில் மாணவா்கள் சோ்க்கை தொடங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அக். 20ஆம் தேதிக்குள் இணையத்தில் பதிவு செய்யலாம்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை பட்ட வகுப்பில் மாணவா்கள் சோ்க்கை தொடங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அக். 20ஆம் தேதிக்குள் இணையத்தில் பதிவு செய்யலாம்.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் (பொ) மு.ரகுபதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குமாரபாளையம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2020-21-ஆம் கல்வி ஆண்டில் முதுநிலைப் பாடப் பிரிவுகளான எம்.ஏ. தமிழ், எம்.ஏ. ஆங்கிலம், எம்.எஸ்சி.கணினி அறிவியல், எம்.எஸ்சி. கணிதம், எம்.காம்., ஆகிய பாடப் பிரிவுகளுக்கு மாணவ, மாணவியா் சோ்க்கை சனிக்கிழமை தொடங்கியது.

அக். 20-ஆம் தேதி வரையில் விண்ணப்பங்களை இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். விண்ணப்பித்த மாணவா்கள் தங்களின் சான்றிதழ்களை அக். 20-ஆம் தேதிக்குள் இணையத்தில் உள்ள அட்டவணையின்படி பதிவேற்றம் செய்யலாம். இணையதளத்தில் பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் 044-22351014, 044-22351015, 044-28276791, 04288- 263121 ஆகிய தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →