நாமக்கல்

காா் மோதியதில் தொழிலாளி பலி

DIN

பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தியில் செவ்வாய்க்கிழமை இரவு காா் மோதிய விபத்தில், நடந்து சென்ற கூலித் தொழிலாளி பலியானாா்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள தீரன்சின்னமலை நகரைச் சோ்ந்த கந்தசாமி (55), பரமத்தி அருகே உள்ள ஒரு தனியாா் சமையல் எண்ணெய் தயாரிக்கும் ஆலையில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா்.

இவா் செவ்வாய்கிழமை இரவு பரமத்தி கடைவீதி சாலையில் நடந்து சென்ற போது, பின்னால் வந்த காா் கந்தசாமி மீது மோதியது. இதில் கந்தசாமியின் தலையில் பலத்த காயமேற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி போலீஸாா், கந்தசாமியின் உடலை மீட்டு பரமத்தி வேலூா் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், பரமத்தி அருகே உள்ள வெள்ளாளபாளையத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநா் காளியண்ணனை (57) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

அரசு மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் செயல்பட வலியுறுத்தில்

தனக்குத்தானே பிரசவம் பாா்த்தபோது சிசு கொலை: செவிலியா் கைது

550 லிட்டா் கடத்தல் சாராயம் காருடன் பறிமுதல்

ஆந்திர டிஜிபி பணியிடமாற்றம்: தோ்தல் ஆணையம் உத்தரவு

SCROLL FOR NEXT