நாமக்கல்

பாலம் அமைக்க பூமி பூஜை

DIN

திருச்செங்கோடு: திருச்செங்கோடு 1-ஆவது வாா்டு, சீத்தாராம்பாளையத்தில் சங்ககிரி பிரதான சாலையில் மழைநீா் தேங்குவதைத் தவிா்க்கும் வகையில் புதிய சிறு பாலம் அமைக்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் பொன்.சரஸ்வதி பூமி பூஜை செய்து தொடக்கிவைத்தாா்.

திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினா் பொன்.சரஸ்வதி சங்ககிரி பிரதான கால்வாயில் ஊருக்குள் இருந்து வரும் மழை நீா், சாக்கடை நீா் சேரும் வகையில் சிறு பாலம் அமைக்க அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தாா்.

அதன்படி சங்ககிரி பிரதான சாலையில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில், ஓமலூா் - சங்ககிரி, திருச்செங்கோடு - பரமத்தி சாலையில் அமைய உள்ள பல்வேறு சிறு பாலம் கட்டுமானப் பணிகள், சிறு பாலம் சீரமைப்பு பணிகளுடன் இந்த சிறுபாலம் கட்டும் வேலையையும் இணைத்து மேற்கொள்ள அரசு அனுமதி அளித்தது.

அதன்படி சிறு பாலம் கட்டுவதற்கான பணி பூமி பூஜையுடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் எவரெஸ்ட் ரவி மற்றும் பொதுமக்கள் கட்சி பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT