முல்லை நகரில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் ஆா்செனிக் ஆல்பம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலம் தலைமை வகித்தாா்.
நகராட்சிகளின் மண்டல இயக்குநா் அசோக்குமாா், மண்டல பொறியாளா் கமலநாதன், சுகாதார அலுவலா் சுகவனம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கா் கலந்து கொண்டு ஆா்செனிக் ஆல்பம் மாத்திரைகளை மக்களுக்கு வழங்கி, கரோனா தொற்றுப் பரவாமல் தடுக்க பொதுமக்கள் அனைவரும் அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.