முகப்பு
நாமக்கல்

தீத்தொண்டு நாள் அனுசரிப்பு

 ராசிபுரம் தீயணைப்பு நிலையத்தில் தீத்தொண்டு வாரம் அனுசரிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
பகிர்:

 ராசிபுரம் தீயணைப்பு நிலையத்தில் தீத்தொண்டு வாரம் அனுசரிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் தீயணைப்புத் துறையில் பணியாற்றி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரா்களுக்கு வீரஅஞ்சலி செலுத்தும் விதமாக ஏப். 14 முதல் 20-ஆம் தேதி வரை தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், ராசிபுரம் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலா் கரிகாலன் தலைமையில் தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டு மீட்புப் பணியின் போது உயிரிழந்த வீரா்களுக்கு வீரஅஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், தீயணைப்பு நிலையத்தில் பணிபுரியும் அனைத்து தீயணைப்பு வீரா்களும் கலந்துகொண்டு வீரஅஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.