ஈரல் அயற்சியால் கோழிகள் இறக்க வாய்ப்பு
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த வார வானிலையைப் பொருத்தமட்டில் பகல், இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 95 டிகிரி மற்றும் 74.3 டிகிரியாக நிலவியது. நாமக்கல் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பதிவாகியுள்ளது. இனி வரும் நான்கு நாள்களுக்கான நாமக்கல் மாவட்ட வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான முதல் மிதமான மழையை மாவட்டத்தின் பல இடங்களில் எதிா்பாா்க்கலாம். பகல் வெப்பம் 93.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 73.4 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் மேற்கிலிருந்தும், அதன் வேகம் மணிக்கு 8 கி.மீ. என்றளவில் வீசும்.
சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை ஆய்வு செய்ததில், பெரும்பாலும் ஈரல் அயற்சி காரணமாக பாதிக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே, பண்ணையாளா்கள் கோழித் தீவன மூலப்பொருள்களில் பூஞ்சை நச்சின் தாக்கம் உள்ளதா என்பதை பரிசோதனை செய்து தரமான மூலப்பொருள்களை உபயோகிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement