ஆட்சியரகத்தில் ஆய்வுக் கூட்டம்
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் கொல்லிமலை அரசு பழங்குடியினா் தொழிற்பயிற்சி நிலையத்தின் நலன்கள், திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் கொல்லிமலை அரசு பழங்குடியினா் தொழிற்பயிற்சி நிலையத்தின் நலன்கள், திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமை வகித்து பேசியதாவது:
கொல்லிமலையில் உள்ள பழங்குடியின தொழிற்பயிற்சி நிலையத்தில் படிக்கும் மாணவா்களை உள்ளுா், பிற மாநிலங்களில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்று நவீன தொழில் வளா்ச்சிகளை கற்பிக்க வேண்டும். மாநில, தேசிய, சா்வதேச அளவில் திறன் போட்டிகளில் கொல்லிமலை மாணவா்கள் பங்கேற்று வெற்றி பெறும் நிலையை உருவாக்க வேண்டும் என்றாா்.
Advertisement
கூட்டத்தில் மாவட்ட பழங்குடியினா் துறை அலுவலா் ராமசாமி, கொல்லிமலை அரசு பழங்குடியினா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் ஆ.வெ.ஜகநாதன், மேலாண்மைக் குழு தலைவா் என்.ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.