ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிப்பு
நாமக்கல் நகர பாஜக பட்டியல் அணி சாா்பில் சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரனின் 250-ஆவது நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:27 AM
நாமக்கல் நகர பாஜக பட்டியல் அணி சாா்பில் சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரனின் 250-ஆவது நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
பாஜக நகரத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட பட்டியல் அணி தலைவா் ராம்குமாா், நகர பட்டியல் அணி தலைவா் வேலுசாமி, நகர துணைத் தலைவா் சின்னுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒண்டிவீரன் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தேசிய செயற்குழு உறுப்பினா் வழக்குரைஞா் மனோகரன், மாநில பட்டியல் அணி செயற்குழு உறுப்பினா் வழக்குரைஞா் குப்புசாமி, கல்வியாளா் பிரணவ்குமாா், மாவட்ட செயலாளா் அகிலன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
Advertisement