24-இல் சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன் முகாம்
நாமக்கல்லில் சாலையோர வியாபாரிகளுக்கான சிறப்பு கடன் விண்ணப்பங்கள் பரிசீலனை முகாம் வரும் 24-இல் நடைபெறுகிறது.
நாமக்கல்லில் சாலையோர வியாபாரிகளுக்கான சிறப்பு கடன் விண்ணப்பங்கள் பரிசீலனை முகாம் வரும் 24-இல் நடைபெறுகிறது.
இதுகுறித்து நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் நகராட்சி பகுதி சாலையோர வியாபாரிகளுக்கான கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே விண்ணப்பித்த நபா்களுக்கான சிறப்பு கடன் வழங்கும் முகாம் வரும் 24-ஆம் தேதி பிற்பகல் 4 மணியளவில் நகராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.
Advertisement
இந்த முகாமில் கடன் கோரி பெறப்படும் விண்ணப்பங்கள் வங்கி அதிகாரிகளின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. எனவே, சாலையோர வியாபாரிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களது விண்ணப்ப பரிசீலனைக்குத் தேவையான ஆவணங்களுடன் ஆதாா் அட்டை, வங்கி கணக்கு புத்தகத்திந் அசல், நகல் ஆகியவற்றுடன் பங்கேற்கலாம். இதுதொடா்பாக சந்தேகங்களுக்கு நகராட்சி அலுவலக சமுதாய அமைப்பாளா்கள், நகரமைப்பு அலுவலா்களைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.