பிஎஸ்என்எல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
நாமக்கல்லில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:31 AM
நாமக்கல்லில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அகில இந்திய பிஎஸ்என்எல் ஊழியா்கள் சங்க மையக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், ஒவ்வொரு கிளை அலுவலகங்கள் முன்பும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நாமக்கல் கிளை தலைவா் மாதேஸ்வரன் தலைமை வகித்தாா்.
இதில், பிஎஸ்என்எல்-இன் பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது, தொலைபேசி வழித்தடம், தொலை தொடா்பு கோபுரங்கள் உள்ளிட்டவற்றை பிற செல்லிடப்பேசி நிறுவனங்களுக்கு வழங்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
Advertisement