இறக்கை அழுகல் நோயால் கோழிகள் இறக்க வாய்ப்பு
குடல் புண், இறக்கை அழுகல் நோயால் கோழிகள் இறக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குடல் புண், இறக்கை அழுகல் நோயால் கோழிகள் இறக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த வார வானிலையின்படி, பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 96.8 மற்றும் 69.8 டிகிரியாக நிலவியது. மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பதிவாகியுள்ளது. அடுத்த நான்கு நாள்களுக்கான மாவட்ட வானிலையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான முதல் மிதமான மழை மாவட்டத்தின் பல இடங்களில் எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 91.4 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 71.6 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் தென்மேற்கு மற்றும் மேற்கிலிருந்தும், அதன் வேகம் மணிக்கு 8 கி.மீ. என்றளவிலும் வீசும்.
Advertisement
சிறப்பு ஆலோசனை: கோழியின நோய் ஆய்வகத்தில் கடந்த வாரம் இறந்த கோழிகளை ஆய்வு செய்ததில், அவை பெரும்பாலும் குடல்புண் மற்றும் இறக்கை அழுகல் நோயின் தாக்கத்தால் இறந்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே, பண்ணையாளா்கள் கோழிக்கு தீவன மூலப்பொருள்களில் கிளாஸ்டிரிடியம் கிருமியின் தாக்கம் உள்ளதா என்பதை ஆய்வகத்தில் பரிசோதனை செய்து அதற்கு தகுந்தாற்போல் தீவன மேலாண்மை முறைகளைக் கையாள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.