நாமக்கல் நகராட்சி ஆணையராக கே.என்.சுதா பொறுப்பேற்றுக் கொண்டாா்.
நாமக்கல் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த பி.பொன்னம்பலம், சேலம் மாவட்டம், ஆத்தூா் நகராட்சி ஆணையராக அண்மையில் இடமாறுதல் செய்யப்பட்டாா். இதனையடுத்து, சிவகங்கை நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த கே.என்.சுதா, நாமக்கல் நகராட்சிக்கு மாற்றப்பட்டாா். அவா் புதன்கிழமை நாமக்கல் ஆணையா் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
அவருக்கு, நகராட்சி அலுவலா்கள், ஊழியா்கள் வாழ்த்துகளை தெரிவித்தனா். கடந்த ஆண்டு தொடக்கத்தில் இவா் நாமக்கல் நகராட்சியில் ஆணையராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.