விஜய் ஆதரவாளர்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம்: அன்புமணி
விஜய் ஆதரவாளர்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விஜய் ஆதரவாளர்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கடலூரில் அவர் அளித்த பேட்டியில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் தோல்வியடைய வைத்துள்ளனர். இது பெண்களுக்கு திமுக செய்யும் மிகப் பெரிய துரோகம். பெண் சிசுவை கருவிலே கொன்றதற்கு ஈடான ஒரு செயலை திமுக செய்திருக்கிறது. மசோதா நகலை ஸ்டாலின் எரித்தது குறித்து தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
மகளிர் மசோதாவை தோற்கடித்துவிட்டு ஸ்டாலின் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறார். மகளிர் மசோதாவை தடுத்ததோடு மட்டுமல்லாமல் அதை கொண்டாடுகின்ற முதல்வரை பார்த்திருக்கிறீர்களா?. இந்த மசோதா நிறைவேறியிருந்தால் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 59ஆக உயர்ந்திருக்கும்.
Advertisement
அதில் 20 பெண்கள் 2029 தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள். 2031 பேரவைத் தேர்தலிலும் 117 பெண்கள் சட்டப்பேரவைக்கு வருவார்கள். விஜய்யின் நோக்கமும் எங்கள் நோக்கமும் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான். விஜய் தேர்தலில் ஓரளவிற்கு வாக்குகள் பெறுவார். ஆனால் தேர்தலில் வெற்றி பெற முடியாது.
விஜய் ஆதரவாளர்களுக்கு அன்பான் வேண்டுகோள் வைக்கிறேன். விஜய் ரசிகர்கள் விஜய்க்குத்தான் வாக்களிப்பார்கள். விஜய் ஆதரவாளர்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். அவர்கள் தங்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம். திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டுமென்றால் அதிமுக கூட்டணிக்கு வாக்காளியுங்கள்.
அதன்மூலம் திமுக ஆட்சி அகற்றப்படும். உங்கள் நோக்கம் வெற்றி பெறும். திமுக எதிர்க்கட்சியாகக்கூட வரக்கூடாது. அதுதான் எங்கள் நோக்கம் இவ்வாறு குறிப்பிட்டார்.