முகப்பு
தமிழ்நாடு

விஜய் ஆதரவாளர்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம்: அன்புமணி

விஜய் ஆதரவாளர்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Updated On : 19 ஏப்ரல் 2026, 1:08 pm IST
அன்புமணி - கோப்புப் படம்
பகிர்:

விஜய் ஆதரவாளர்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கடலூரில் அவர் அளித்த பேட்டியில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் தோல்வியடைய வைத்துள்ளனர். இது பெண்களுக்கு திமுக செய்யும் மிகப் பெரிய துரோகம். பெண் சிசுவை கருவிலே கொன்றதற்கு ஈடான ஒரு செயலை திமுக செய்திருக்கிறது. மசோதா நகலை ஸ்டாலின் எரித்தது குறித்து தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

மகளிர் மசோதாவை தோற்கடித்துவிட்டு ஸ்டாலின் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறார். மகளிர் மசோதாவை தடுத்ததோடு மட்டுமல்லாமல் அதை கொண்டாடுகின்ற முதல்வரை பார்த்திருக்கிறீர்களா?. இந்த மசோதா நிறைவேறியிருந்தால் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 59ஆக உயர்ந்திருக்கும்.

Advertisement

Advertisement

அதில் 20 பெண்கள் 2029 தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள். 2031 பேரவைத் தேர்தலிலும் 117 பெண்கள் சட்டப்பேரவைக்கு வருவார்கள். விஜய்யின் நோக்கமும் எங்கள் நோக்கமும் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான். விஜய் தேர்தலில் ஓரளவிற்கு வாக்குகள் பெறுவார். ஆனால் தேர்தலில் வெற்றி பெற முடியாது.

விஜய் ஆதரவாளர்களுக்கு அன்பான் வேண்டுகோள் வைக்கிறேன். விஜய் ரசிகர்கள் விஜய்க்குத்தான் வாக்களிப்பார்கள். விஜய் ஆதரவாளர்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். அவர்கள் தங்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம். திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டுமென்றால் அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

அதன்மூலம் திமுக ஆட்சி அகற்றப்படும். உங்கள் நோக்கமும் வெற்றி பெறும். திமுக எதிர்க்கட்சியாகக்கூட வரக்கூடாது. அதுதான் எங்கள் நோக்கமும்கூட இவ்வாறு குறிப்பிட்டார்.

summary

PMK leader Anbumani Ramadoss has said that Vijay supporters should not waste their votes.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments