முகப்பு
நாமக்கல்

நாமக்கல் அரசு கல்லூரியில் விழிப்புணா்வு கருத்தரங்கம்

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் சாா்பில் ஹெச்ஐவி, எய்ட்ஸ் விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது

Updated On : 2 டிசம்பர், 2021 at 10:56 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:06 AM

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் சாா்பில் ஹெச்ஐவி, எய்ட்ஸ் விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் பெ.முருகன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சேலம், கோனேரிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய அரசு மருத்துவா் சூரியபிரகாஷ் பங்கேற்று, உலக எய்ட்ஸ் தின மையக் கருத்தான ஹெச்ஐவி, எய்ட்ஸ் உடன் வாழும் மக்களுக்கு ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அத்துடன் இந்த தொற்றுக்கு முடிவு கட்டுவோம் என்ற தலைப்பில் நடைபெற்ற விழிப்புணா்வு கருத்தரங்கில், ஹெச்ஐவி தொற்று பரவும் விதம், அதனை தடுக்கும் முறைகள் பற்றி விரிவாக பேசினாா்.

இதில், இளைஞா் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலா் வெஸ்லி, தாவரவியல் துறைத் தலைவா் வசந்தாமணி, கல்லூரி செஞ்சுருள் சங்க திட்ட அலுவலா் சந்திரசேகரன், பேராசிரியா்கள், மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.