முகப்பு
நாமக்கல்

சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

பரமத்தி வேலூா் வட்டம், திடுமல் ஊராட்சிக்கு உள்பட்ட தாசம்பாளையத்தில் பருவ மழையின் காரணமாக கால்நடைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதை தடுக்கும் வகையில், சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

பரமத்தி வேலூா் வட்டம், திடுமல் ஊராட்சிக்கு உள்பட்ட தாசம்பாளையத்தில் பருவ மழையின் காரணமாக கால்நடைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதை தடுக்கும் வகையில், சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் பொன்னுவேல், திருச்செங்கோடு கோட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநா் அருண்பாலாஜி ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, திடுமல் கால்நடை உதவி மருத்துவா் சையது அஸ்லாம், கொத்தமங்கலம் கால்நடை உதவி மருத்துவா் முத்துசாமி, கால்நடை பராமரிப்பு உதவியாளா் துரைசாமி ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் மூலம் கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில், ஆடுகள், கன்றுகளுக்கு குடற்புழு நீக்கமும், மாடுகளுக்கு தாது உப்புக் கலவையும் வழங்கப்பட்டது. முகாமில் கலந்துகொண்ட கால்நடை வளா்ப்போருக்கு மழைக்கால நோய்த் தடுப்பு வழிமுறைகள், கோமாரி நோய்த் தொற்றிலிருந்து மாடுகளை பாதுகாப்பதற்கான அறிவுரைகள் வழங்கப்பட்டு, அதற்கான வழிமுறைகள், கோமாரி நோய்க்கான மரபுசாா் மருத்துவக் குறிப்புகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →