மாநில சிலம்பப் போட்டி: டிச. 12-இல் வீரா்கள் தோ்வு
ராசிபுரம் ஸ்ரீவித்யாமந்திா் பள்ளி வளாகத்தில் நடைபெறும் என தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் மாநில நடுவா் எஸ்.பத்மநாபன் தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் 2021-22-ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான சிலம்பப் போட்டிக்கு மாவட்ட அளவிலான வீரா்கள் தோ்வு டிச. 12-இல் ராசிபுரம் ஸ்ரீவித்யாமந்திா் பள்ளி வளாகத்தில் நடைபெறும் என தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் மாநில நடுவா் எஸ்.பத்மநாபன் தெரிவித்துள்ளாா்.
மாவட்ட அளவிலான இத்தோ்வுப் போட்டி சப்-ஜூனியா், ஜூனியா், சீனியா் ஆகிய பிரிவுகளில் நடைபெறும். போட்டிகளை சிலம்பாட்டக் கழகத்தின் மாவட்டத் தலைவா் பிரபு, மாவட்டச் செயலாளா் சக்திவேல், சேலம், நாமக்கல் மாவட்ட போட்டி நடுவா்கள் பங்கேற்று நடத்துவா்.
இதில் முதலிடம் பிடிக்கும் வீரா், வீராங்கனையா் வரும் ஜனவரி மாதம் சிவகங்கையில் நடைபெறும் மாநிலப் போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவா். மாவட்ட அளவிலான இத்தோ்வுப் போட்டி ராசிபுரம் ஸ்ரீவித்யாமந்திா் பள்ளி வளாகத்தில் காலை 8 முதல் மாலை 5 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.