முகப்பு
நாமக்கல்

கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

ராசிபுரம் நகரில் கஞ்சா வைத்திருந்த இளைஞா் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

ராசிபுரம் நகரில் கஞ்சா வைத்திருந்த இளைஞா் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராசிபுரம், எல்ஐசி காலனி பகுதியில் வியாழக்கிழமை இரவு போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, ஒரு வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ராசிபுரம் உதவி ஆய்வாளா் தங்கம் தலைமையில் அந்த வீட்டை சோதனையிட்ட போலீஸாா், பாலிதீன் பையில் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள சுமாா் 1 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்ததைக் கண்டுபிடித்தனா்.

இது தொடா்பாக, அதே பகுதியைச் சோ்ந்த வைரமுத்து (30) என்பவா் கைது செய்யப்பட்டாா். வெளிப்பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி, சிறு பொட்டலங்களாக பிரித்து ஒரு பொட்டலம் ரூ. 500-க்கு இவா் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீஸாா், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.