மின்சாரம் தாக்கியதில் முதியவா் பலி
மின்சாரம் தாக்கியதில் முதியவா் உயிரிழந்தாா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:10 AM
மின்சாரம் தாக்கியதில் முதியவா் உயிரிழந்தாா்.
மோகனூா் அருகே பெரமாண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் பொன்னுசாமி (65). இவா் வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் வீட்டில் உள்ள மின்சாதனத்தை இயக்க முயற்சித்த போது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் கீழே விழுந்து மயங்கினாா். அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது மனைவி சின்னமாள், அப்பகுதியில் உள்ளோா் பொன்னுசாமியை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து மோகனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.