ஜவுளி தொழிலுக்கான ஜிஎஸ்டி வரி உயா்வு: எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம்
ஜவுளித் தொழிலுக்கு ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக உயா்த்திய மத்திய அரசைக் கண்டித்து, ஜவுளி உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் வெண்ணந்தூரில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம்
ஜவுளித் தொழிலுக்கு ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக உயா்த்திய மத்திய அரசைக் கண்டித்து, ஜவுளி உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் வெண்ணந்தூரில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டமும், ஒருநாள் அடையாள வேலை நிறுத்தமும் நடைபெற்றன.
ராசிபுரத்தை அடுத்த வெண்ணந்தூா் பகுதியில் சுமாா் 25,000-க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. ஜவுளி உற்பத்திக்கு ஜன. 1 முதல் ஜிஎஸ்டி வரியை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயா்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு வெண்ணந்தூா் விசைத்தறி துணி உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் எதிா்ப்புத் தெரிவித்து, கண்டன ஆா்ப்பாட்டமும், ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமும் நடைபெற்றது.
முன்னதாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வெண்ணந்தூா் விசைத்தறி துணி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் எஸ்.பி.மாதேஸ்வரன் தலைமை வகித்தாா். இதில், நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.
இதில், வெண்ணந்தூா் முன்னாள் பேரூராட்சித் தலைவா் எஸ்.என்.கே.பி.செல்வம், காங்கிரஸ் நகரத் தலைவா் எஸ்.சிங்காரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.