முகப்பு
நாமக்கல்

இயற்கை மருத்துவ விழிப்புணா்வு நிகழ்ச்சி

19 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவியருக்கு இயற்கை மருத்துவம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 17 டிசம்பர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:12 AM

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் இளைஞா் செஞ்சிலுவை சங்கம் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையம் ஆகியவை சாா்பில், 19 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவியருக்கு இயற்கை மருத்துவம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் பெ.முருகன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலா் செந்தில்குமாா் கலந்துகொண்டு, இயற்கை மருத்துவம் குறித்தும் யோகா மற்றும் தியானப் பயிற்சிகளை மேற்கொள்வதன் பயன்கள் குறித்தும் பேசினாா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவியருக்கு கருவேப்பிலை பொடி, நெல்லிக்காய் பொடி, முருங்கை இலை பொடி மற்றும் தேன் அடங்கிய தமிழக அரசால் வழங்கப்பட்ட இயற்கை நலப் பெட்டகம் வழங்கப்பட்டது. பேராசிரியா்கள் மற்றும் ஆசிரியரல்லாத அலுவலா்களுக்கும் நோய் எதிா்ப்பு மூலிகைப்பொடி வழங்கப்பட்டது. இதில், சுற்றுச் சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளா் ராஜசேகா், பாண்டியன், குடிமக்கள் நுகா்வோா் மன்ற ஒருங்கிணைப்பாளா் சேகா், செஞ்சுருள் சங்கத் திட்ட அலுவலா் சந்திரசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கல்லூரி இளைஞா் செஞ்சிலுவை சங்கத் திட்ட அலுவலா் வெஸ்லி செய்திருந்தாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.