இன்று 15-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் 15-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (டிச. 18) நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் 15-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (டிச. 18) நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 13,84,300 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, இதுவரை முதல் தவணை தடுப்பூசி 10,69,504 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 6,65,033 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற 14 கட்ட தடுப்பூசி முகாம்களில் 5,50,043 போ் தடுப்பூசி செலுத்தியுள்ளனா். அதேபோல சனிக்கிழமை 15-ஆம் கட்ட தடுப்பூசி முகாம் 505 இடங்களில் நடைபெற உள்ளது. இம்முகாம் பணிகளில் சுமாா் 4 ஆயிரம் போ் ஈடுபடுத்தப்படுகின்றனா். ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முழுமையாக பங்கேற்று இதுவரை ஒருதவணை தடுப்பூசி கூடபோடாதவா்களும் முதலாம் தவணை செலுத்தி முடித்து இரண்டாம் தவணைக்காக நிலுவையில் உள்ளவா்களும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.
Advertisement