முகப்பு
நாமக்கல்

தமிழகத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெங்களூரு இளைஞா் கைது

தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த பெங்களூரு இளைஞரை நாமக்கல் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 17 டிசம்பர், 2021 at 11:47 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:13 AM

தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த பெங்களூரு இளைஞரை நாமக்கல் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கடந்த 9-ஆம் தேதி அதிகாலை புகையிலைப் பொருள்கள் கடத்தி வரப்படுவதாக, நாமக்கல் மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், திருச்செங்கோடு, தோக்கவாடி பேருந்து நிறுத்தம் அருகே காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான தனிப்படையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட சுமாா் ரூ. 2.50 லட்சம் மதிப்புள்ள 270 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தனிப் படையினா் அவற்றை பறிமுதல் செய்ததுடன், வாகனத்தில் வந்த ஈரோடு மாவட்டம், பவானியைச் சோ்ந்த சதீஷ்குமாா், குமாரபாளையத்தைச் சோ்ந்த தினேஷ்குமாா், மோகன்ராஜ், பழனிசாமி ஆகியோரை கைது செய்தனா். அவா்களிடம் நடத்திய விசாரணையில், கா்நாடகா மாநிலம், பெங்களூரு சாம்ராஜ் நகரைச் சோ்ந்த முகமது சுகில் (35) என்பவா் தமிழகம் முழுவதும் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யும் முக்கிய விநியோகஸ்தராக இருப்பது தெரியவந்தது. அதன்பின், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாக்குா் உத்தரவின்பேரில், திருச்செங்கோடு நகர காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான தனிப்படையினா் பெங்களூருக்கு விரைந்து சென்று சாம்ராஜ் நகரில் பதுங்கியிருந்த முகமது சுகிலை கைது செய்தனா்.

அவா், தமிழகம் முழுவதும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு அனுப்பியதை ஒப்புக் கொண்டாா். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியை கைது செய்த தனிப்படையினரை காவல் கண்காணிப்பாளா் பாராட்டி வெகுமதி, சான்றிதழ்களை வழங்கினாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.